மஸ்ஜிதுர் ரஹ்மான்



காரைக்குடி மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்..


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம் அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது ஒவ்வொரு கதிரிலும் நூரு தானியங்கள் உள்ளன தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காககக் கொடுக்கிறான் அல்லாஹ் தாராளமானவன் அறிந்தவன். திருக்குர்ஆன் 2:261

எவர் ஒருவர் அல்லாஹ்விற்காக ஒரு பள்ளியை உருவாக்குகிறரோ, அவருக்கு சுவர்க்கத்தில் அல்லாஹ் ஒரு மாளிகையை உருவாக்குகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹமத்

அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையினால் காரைக்குடியில் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக தவ்ஹீத் பள்ளிவாசல் அமைப்பதின் முதல் படியாக இடம் வாங்கப்பட்டு, 75% பணம் செலுத்திவிட்ட நிலையில், இதில் இன்னும் பொருளாதாரம் தேவைப்படுவதால், சகோதர/சகோதரிகள் உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.



ஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று செயல்களைத்தவிர மற்றவை அவனை விட்டு அறுந்துவிடுகின்றன. நிலையான தர்மம் ,பிறருக்கு பயன்தரக்கூடிய கல்வி, தன் தந்தைக்காக பிரார்த்திக்கும் நற்பிள்ளை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி