Tuesday, September 17, 2013

கடந்த ஓராண்டில் நடைபெற்ற செயல்பாடுகளில்...

  1. மூன்று மாத தவணையில் ரூ. 10, 0000 /-  வரை வட்டியில்லா கடனுதவி (பைத்துல்மால்) திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  2. கல்வி, மருத்துவ, வாழ்வாதார உதவிகள் தேவையுள்ள மக்களை சென்றடையும் வண்ணம் செயல்படுத்தப்படுகிறது
  3. ரமளானில் 371 முஸ்லிம் குடும்பங்களுக்கு ரூபாய் 1,25,200 /- மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
  4. முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ஒன்று நடத்தப்பட்டது.
  5. சுமார் 73 முஸ்லிம் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 300 /- ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது.
  6. ஹஜ் பெருநாள் கூட்டுக் குர்பானி மூலம் 86 முஸ்லிம் குடும்பங்களுக்கு இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. கூட்டுக் குர்பானிக்காக ரூபாய். 96,000 /-  திரட்டப்பட்டது.
  7. இரு பெருநாட்களிளும் நபி வழியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது.
  8. கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாமில் 110 ஆண் பிள்ளைகளும், 102 பெண் பிள்ளைகளும் கலந்து கொண்டனர், 12 நாட்கள் நடைபெற்ற முகாமின் மொத்த செலவு ரூபாய். 3,60,000 /- ஆகும்.
  9. இரத்ததான முகாமில் 54 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.
  10. அநீதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கும், மார்க்க விளக்கப் பொதுக்கூட்டங்களுக்கும் மக்களை திரட்டி அழைத்துச் செல்லப்பட்டது. இரண்டு பொதுக்கூட்டங்கள் ரூபாய். 96,000 /- செலவில் நடத்தப்பட்டது.
  11. தர்காக்களில் நடக்கும் பித்தலட்டங்களை அம்பலப்படுத்த “தர்காக்களில் நடப்பது என்ன” என்ற குறுந்தகடு 1000 முஸ்லிம்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
  12. குர்ஆன் வசனங்கள் கொண்ட காலண்டர் 1000 முஸ்லிம் வீடுகளுக்கு கொடுக்கப்பட்டது.
  13. இஸ்லாமிய சமூகத்தில் நடைபெரும் அனாச்சாரங்களை எதிர்த்து குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் & சுவரொட்டி மற்றும் நோட்டீஸ் பிரச்சாங்கள் செய்யப்பட்டது.